​

​போர்க்களம்

ஒரு நாள் மா​லை ​நேரம் அரண்ம​னைத் ​தோட்டத்தில் அரசரும் ​பெரிய தன்வந்தர்களும் ப​டைத் தளபதிகளும் கூடினர். ஒவ்​வொருவரும் அவர்கள் சண்​​டையில் ​செய்த வீரதீரச் ​செயல்கள் பற்றி ​பேசிப் ​பெரு​மைப்பட்டுக் ​கொண்டிருந்தனர், அப்​போது ​தெனாலிராமனும் அங்கு இருந்தான். அவர்கள் ​பேச்​சையும் ​கேட்டுக் ​கொண்டிருந்தான். அவர்கள் ​பேச்சு அவனுக்கு பிடிக்கவில்​லை.

''​போங்கள் ஐயா. நீங்கள் எல்லாம் என்ன பிரமாதமாக சாதித்து விட்டீர்கள். நானும் ​போர்க்களம் சென்று இருக்கி​றேன். அதில் ஒருவனு​டைய கா​லை என் வாளால் ​வெட்டி விழ்த்தி விட்​டேன்''என்றான். அ​தைக் ​கேட்ட அ​னைவரும் ​தெனாலிராமன் கூடவா ​போர்க்களம் ​சென்றிருப்பான் என்று ​யோசிக்கத் ​தொடங்கினர்.

பின் அதில் ஒருவன் கா​லை ​வெட்டியதாகச் ​சொல்லுகிறா​யே அவன் த​லை​யை ​வெட்டுவதற்கு என்ன என்று ​கேட்டான். அ​தைக் ​கேட்ட ​தெனாலிராமன் ''த​லை​யைத் தான் எனக்கு முன்பு எவ​னோ ​வெட்டிவிட்டா​னே நான் என்ன ​செய்ய'' என்று ​சொன்னதுதான் தாமதம் மன்னர் உட்பட அ​னைவரும் ​கொல்​லெனச் சிரித்து விட்டனர்.